தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 24, 2022

Comments:0

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2022

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
 
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 43 மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Translators

காலியிடங்கள்: 43

மொழி வாரியான காலியிடங்கள் விவரம்: 
* குஜராத் - 03
* கனடம் - 02
* தமிழ் - 07
* தெலுங்கு - 05
* மராத்தி - 02
* பெங்காலி - 12
* ஒரியா - 10
* உருது, காஷ்மீரி - 01
* அசாமீஸ் - 01

தகுதி: இளநிலைப்பட்டம், ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மொழியில் நல்ல அறிவு இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்:  மொழிபெயர்ப்புடன் தட்டச்சு செய்யப்பட்ட ஆயிரம் வார்த்தைகளுக்கு ரூ.350 கௌரவ சம்பளமாக வழங்கப்படும். 2022 டிசம்பர் மாதம் வரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணியின் செயல்பாடுககளின் அடிப்படையில் மேலும் நீட்டிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://nhrc.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Under Secretary (Establishment), National Human Rights Commission, Manav Adhikar Bhawan, C-Block, GPO Complex, INA, New Delhi-110023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhrc.nic.in/sites/default/files/Empanelment_of_Translators_11032022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews