Breaking

Thursday, February 03, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும் - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சட்டமன்ற தேர் தலை போல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதாவது வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணித்து கொண்டு தான் வர வேண்டும். சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரு மீட்டருக்கு ஒரு வாக்காளர் என வரி சையாக நிற்க வைக்கப்ப டுவார்கள்.

அதுதவிர வாக்குச் சாவடியில் 10 வகையான உபகரணங்களை கையாள வேண்டும். அதாவது, ஒவ் வொரு வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிட வெப்ப மானி, முகக்கவசம், ஒவ் வொருவருக்கும் தனி கையுறை கொடுக்கப்ப டும். கையுறை போட்டு கொண்டு தான் வாக் குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க வேண்டும். இருவகையான சானிடை சர், பயன்படுத்திய கையு றைகளை போடுவதற்காக பிளாஸ்டிக்பைகள். பாது காப்பு கவச உடை, வாக் குச்சாவடிகளில் பணியாற் றும் அலுவலர்களுக்கு பேஸ் ஷீல்ட் போன்ற 10 வகையான பொருட்கள் கட்டாயம் வாக்குச்சாவ டிகளில் இருக்கும். ஒவ் வொரு மாவட்டத்திற்கு எவ்வளவு வாக்குச்சாவடி உள்ளது? என்று தொகுதி வாரியாக கணக்கெடுக்கப் பட்டு வருகிறது. வாக்குச் சாவடி எண்ணிக்கைக்கு ஏற்ப தெர்மல் கருவி, கிரு மிநாசினி, பேஸ் ஷீல்ட், கொரோனா பாதுகாப்பு கவச உடை, கையுறைகள் உள்ளிட்ட 10 பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ் வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog