துணை சுகாதார நிலையங்களில் 2448 பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 01, 2021

1 Comments

துணை சுகாதார நிலையங்களில் 2448 பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் ( HWC - HSCs ) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்ப படிவங்கள் / மாவட்ட வாரியாக காலியிடங்கள் விபரம் தேசிய நலவாழ்வு குழுமம் ( https://nhm.tn.gov.in ) வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . " பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் ( https://nhm.tn.gov.in ) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் . குழும இயக்குநர் , செ.ம.தொ.இ. / 1087 / வரைகலை / 2021 மாநில நலவாழ்வு சங்கம் , தமிழ்நாடு , சென்னை “ சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் , சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம் .

1 comment:

  1. ஐயா; நீங்கள் செய்தித்தாள் வந்த செய்திகளில் செவிலியர் மற்றும் சுகாதர பணியளர்கள் என்று வந்தது ஆனால் தற்போதை நீஸ்ல துணைசுகாதரா பணி இடம் மட்மே இடம் பெற்றுள்ளது செவிலியர் பணி இடம் என்ன ஆனது?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews