இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 11.11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 11, 2021

Comments:0

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 11.11.2021

பள்ளிக்கல்வி இராணிப்பேட்டை மாவட்டம் வேலைநிறுத்தம் –

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் -2016-2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டமை - போராட்டக் காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலம் பணிக்காலமாக முறைப்படுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டது அரசாணை நடைமுறைப்படுத்துதல்-சார்பு.

பார்வை2 இல் காணும் அரசாணையின்படி கடந்த 2016 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சார்பாக வேலை நீக்க காலம், தற்காலிக பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக்கல்வி அது வலர்கள் மற்றும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசாணையில் தெரிவித்துள்ளவாறு வேலை நிறுத்தப் போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்திட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள் உரிய செயல்முறை ஆணைகள் பிறப்பித்து தகுதியான விடுப்பு அனுமதித்து (மருத்துவ விடுப்பு நீங்கலாக) இது சார்பான விவரங்கள் சார்ந்தவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிக்கால ஊதியத்தினை பெற்று வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

அரசாணையில் தெரிவித்துள்ள ஆணைகளை பின்பற்றி செயல்படுத்துமாறும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் மாவட்டக்கல்வி அலுவலர், இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு (விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள்) அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews