அண்ணா பல்கலை.யில் எம்எஸ்சி படிப்பு: விண்ணப்பிக்க செப்.15 வரை அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 04, 2021

Comments:0

அண்ணா பல்கலை.யில் எம்எஸ்சி படிப்பு: விண்ணப்பிக்க செப்.15 வரை அவகாசம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்.15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லுாரியில் ஐந்து ஆண்டு எம்.எஸ்சி. படிப்பு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவா்கள் இந்த படிப்பில் சேரலாம். கம்ப்யூட்டா் சயின்ஸ், ஐ.டி. ஆகிய படிப்புகளும், எலக்ட்ரானிக் மீடியா பாட பிரிவும் உள்ளது. இந்த ஆண்டுக்கான சோ்க்கைக்கு, ஆக. 18-ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதையடுத்து இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவா் சோ்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews