Breaking

Saturday, September 04, 2021

பி.எட்., கல்லுாரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து - பல்கலை அதிரடி

'பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆன்லைன் வழியில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றும், தமிழக ஆசிரியர் பல்கலையின் இணைப்புஅந்தஸ்திலும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளின் இணைப்பு அந்தஸ்துக்கு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுவரை நேரடியாக பல்கலைகளில் விண்ணப்பித்து வந்த நிலையில், இந்த ஆண்டு முதல், 'ஆன்லைன்' முறை மட்டுமே பின்பற்றப்படும் என்றும், இதற்கான விரிவான விபரங்களை, பல்கலையின் http://www.tnteu.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog