Breaking

Sunday, August 08, 2021

பெண் கல்வி ஊக்கத்தொகை - பெற்றோர்கள் புகார்

ஆதிதிராவிட மாணவிகளுக்கு கடந்தாண்டு வழங்கப்பட வேண்டிய பெண்கல்வி ஊக்க தொகையினை விரைவில் வழங்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதி திராவிடர் நலத் துறை சார்பில்,பெண் கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தடுக்கவும் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபா யும், ஆறாம் வகுப்புக்கு ஆயிரம் ரூபாயும், ஏழுமற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு ஆயிரத்து 500 ரூபா யும் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத் தில், கடந்த ஆண்டிற்கான ஊக்குவிப்புத் தொகை பாதிக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கிடைக்க வில்லை.

மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை கண்காணிப் பாளர் கோபிநாத் கூறுகை யில், மாவட்டத்தில் அனைவருக்கும் பள்ளி மூலமாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளது.விடு பட்டவர்கள் குறித்து கூறி னால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog