71ல் இருந்த மாணவர் எண்ணிக்கை 816 ஆக உயர்வு - அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

71ல் இருந்த மாணவர் எண்ணிக்கை 816 ஆக உயர்வு - அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது

திருச்சி பிராட் டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக மாணவர் சேர்க்கையை 71லிருந்து 816 ஆக உயர்த்தியதற்காக பள்ளி தலைமையாசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி யுள்ளார். சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ் ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டா டப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுர விக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ஆசி ரியர் தினத்தைமுன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 44 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ கத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்கு றிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா மேல்நிலைக்கல்விக்கும், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பிராட்டியூர் பஞ்சாயத்து யூனியன் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி (52) தொடக் கக்கல்விக்கும் என இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews