வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 15, 2021

Comments:0

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் 2018,2019 ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு புதுப்பிப்பு :

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பத்தி செய்ய வேண்டும். பிறகு மூன்று மாநாடுகளுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு பதிவு முன்னுரிமை அடிப்படையில் அரசின் சில துறைகளில் பணி வழங்கப்படும். தற்போது 10 ம் வகுப்பு முதல் பள்ளிகளிலேயே மாணவர்கள் பதிவு செய்து விடுகின்றனர். அதன் பிறகு ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு புதுப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சலுகை அளித்துள்ளது. அதன்படி 2018, 2019 ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். மேலும் ஒரு முறை மட்டும் வேலைவாய்ப்பை புதுப்பித்து கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது அதற்கு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அம்மாவட்ட தெரிவித்துள்ளது. மேலும் 2017 முதல் 2019 வரையில் வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறிய திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதியை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழுடன் ஆகஸ்ட் 16 ம் தேதிக்குள் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews