Breaking

Wednesday, July 07, 2021

ஆவின் வேலைவாய்ப்பு ரத்து – விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டத்தின் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் தற்போது 2 பதவிகளுக்கான வேலைவாய்ப்பினை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நிறுவனம்

தமிழகத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக private secretary Gr.III மற்றும் extension officer Gr.II என்ற பதவிகளுக்கு மொத்தமாக 3 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. இதற்கு தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழகத்தை சேர்ந்த பலரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர். இப்படியாக இருக்க, தற்போது இந்த பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், பல்வேறு நிறுவன காரணங்களால் இந்த பதவிகளுக்கான வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் அவர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பாக திருப்பி அளிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் அல்லது நேரடியாகவோ பணம் திருப்பி செலுத்தப்பட்டு விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரத்து அறிவிப்பினால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog