மாணவர் வீடுகளுக்கு சத்துணவு: உயர்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

மாணவர் வீடுகளுக்கு சத்துணவு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் வீடுகளுக்கு சத்துணவு: உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட் டுள்ளதால் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு வழங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிபாதுழக்கம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு இருந் தாலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக் குச் சென்று சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க உத்தர விட கோரி, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல வழக்குதொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந் தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பொது முடக்கத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். பலர் வேலையை இழந்துள்ளனர்.

கிராமங்களில் பல குடும் பங்கள் வருவாய் இழந்துள்ளன.

எனவே, இந்த மோசமான கால கட்டத்தில், மாணவர்களுக்கு சத்துணவை வீட்டுக்கே சென்று அரசு வழங்க வேண்டும்.

இதில் சிரமம் உள்ளது. எனவே, உள் ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த சேவையை அரசு மேற்கொள்ளலாம். எனவே, இதுதொடர் பாக ஒரு திட்டத்தை உருவாக்கி, அதுகுறித்த அறிக்கையை வரும் ஜூலை 7-ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews