தபால்துறை முகவர் பணிக்கு வரும் 24ல் நேர்காணல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

தபால்துறை முகவர் பணிக்கு வரும் 24ல் நேர்காணல்

திருப்பூர் தபால் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக பணிபுரிய அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்விகூறியதாவது: ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிலா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், 18 முதல், 50 வயதுடையவர்கள் அனைவரும் முகவராக தகுதியுண்டு.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் எனில், 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், துறை ரீதியான எந்த வித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்க கூடாது.மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கான நேர்காணல் மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் வரும் 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தாராபுரம் பகுதி மக்களுக்கு, தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் வரும் 29ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.திருப்பூர் பகுதி மக்களுக்காக, ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள தலைமை தபால் கோட்ட அலுவலகத்தில் ஆக., 2ம் தேதி காலை, 10:00 மணிக்கும் நடக்கிறது.ஆர்வமுள்ளோர் தங்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, 'பயோடேட்டா' விவரங்களுடன் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews