2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம்.
பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணை.. முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை
பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணையில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான செயல்திறன் தர அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சி பகுதிகளின் பள்ளிக்கல்வி செயல்திறன் 10 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது,.
அதன்படி 91 சதவிகிதம் அளவுக்கு பள்ளிக்கல்வியில் திறனை வெளிப்படுத்திய மாநிலங்களுக்கு அதிகபட்ச புள்ளிகள் வழங்கப்படுகிறது.
2019-20 கல்வியாண்டில் 901 முதல் 950 புள்ளிகள் வரை பெற்று தமிழ் நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், சண்டிகர் மற்றும் அந்தமான்&நிகோபார் ஒன்றிய பிரதேசங்களும் முதலிடத்தை பெற்றுள்ளன.
இதற்காக 1++ என்ற தரவரிசை வழங்கப்பட்டுள்ளது, முதன்முறையாக 5 மாநிலங்கள் பள்ளிக்கல்வி செயல்திறனில் 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளன.
Sunday, June 06, 2021
2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம்.
TAMILNADU
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.