Breaking

Tuesday, April 13, 2021

அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் கோவிட் - 19 நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவிக்கொண்டு வருவதால் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதமின்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித்துறை ( கட்டடம் ) அலுவலர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . கோவிட் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் நடைமுறையினை வட்டம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கண்காணித்து அதனை உறுதிப்படுத்தி இவ்வலுவலகத்திற்கு விரைவில் அறிக்கை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog