தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஐகோர்ட் கிளை கெடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 03, 2021

Comments:0

தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஐகோர்ட் கிளை கெடு!

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்., 30க்குள் நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் தாக்கல் செய்த மனு:அரசு, கடந்த காலங்களில், தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும். பின், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தும். 2020ல் கொரோனா ஊரடங்கால், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.நடப்பாண்டு, பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம், சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன்.அதிர்ச்சியளிக்கும் விதமாக, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது. பணியில் மூத்த தலைமை ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில், பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசின் நடவடிக்கை உள்ளது. இது, சட்டவிரோதம். விதிமீறல் உள்ளது.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ஜேக்கப் குறிப்பிட்டார்.இதுபோல் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை, ஏப்., 30க்குள் நடத்த அனுமதித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
அஞ்சல் வழி பயிற்சி - மாணவர் சேர்க்கை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு வேளாண்மை சான்றிதழ் கல்வி - 2021-22 - (Govt. of Tamil Nadu Agriculture Certificate Course)
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆகியவற்றை ஏப்.30க்குள் நடத்த உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews