சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பணிக்கான பயிற்சியில் பங்கேற்காத, 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடக்க உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி சட்டசபை தேர்தல் பணிபுரிய, 3,567 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்கான தேர்தல் பணிக்கான 2ம்கட்ட பயிற்சி 19ம் தேதி அளிக்கப்பட்டது.
30% பள்ளி கட்டணம் குறைப்பால் தனியார் பள்ளிகளுக்கு ரூ.2525 கோடி இழப்பு
இதில், எந்த வித அறிவிப்பும் இன்றி பயிற்சியில், 219 பேர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு, காரணம் கேட்பு குறிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதில் அளிக்காத பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tuesday, March 30, 2021
தேர்தல் பயிற்சிக்கு வராத 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.