பட்டதாரி ஆசிரியர்கள் பிச்சை எடுப்பு போராட்டம் Graduate teachers' begging protest -
பட்டதாரி ஆசிரியர்கள் பிச்சை எடுப்பு போராட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி பெண் ஆசிரியர்கள் மண்டியிட்டும், ஆண் ஆசிரியர்கள் கையில் தட்டை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.
தமிழகத்தில், நியமன ஈடுபட்டனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற, 34,000 பட்டதாரி ஆசிரி யர்கள் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் விதி 110ன் கீழ், 2026க்குள். 19,260 ஆசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படும் என, 2021ல் அறிவித்தார்.
ஆனால், காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை.
இதைக் கண்டித்து, நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற, பட்ட தாரி ஆசிரியர்கள் கூட்டமைப் பின் சார்பில், சென்னை கலெக் டர் அலுவலகம் அருகே, நேற்று பட்டதாரி ஆசிரியர் கள் நுாதனப் போராட்டத்தில் தங்களின் ஆதார், வாக்கா ளர் அடையாள அட்டை மற் றும் குடும்ப அட்டைகளை, சாலையில் வீசினர். கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, கையில் தட்டேந்தி. பிச்சை எடுக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற வர்கள், மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏற்க னவே தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.