அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 12, 2026

Comments:0

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களும், தேசிய கீதம் ‘ஜன கண மன’ பாடல் பாடுவதற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஜனவரி 28-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.

பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.

அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ பதிப்பு மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க மரியாதை செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 2026-ல் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கிய நடைமுறைகள்:

முழுமையான பாடல்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களும் (முழு வடிவம்) பாடப்பட வேண்டும்.

கால அளவு: பாடலைப் பாடி முடிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ கால அளவு 3 நிமிடம் 10 வினாடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாட வேண்டிய வரிசை: அரசு விழாக்கள் மற்றும் பள்ளி வழிபாட்டுக் கூட்டங்களில், தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும்.

மரியாதை: பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இருப்பினும், திரையரங்குகளில் படம் அல்லது செய்திச் சுருளின் ஒரு பகுதியாக இப்பாடல் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமில்லை.

நிகழ்வுகள்: தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், மற்றும் பத்ம விருதுகள் போன்ற உயரிய விருது வழங்கும் விழாக்களில் இப்பாடல் இடம்பெற வேண்டும்.

இந்த உத்தரவு வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான வழிகாட்டுதல்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் (MHA) செய்திக் குறிப்பில் காணலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews