Breaking

Friday, February 05, 2021

இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?: பள்ளிக்கல்வித்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாமல் மாணவர்கள் வேலைக்கு செல்லும் சூழல் உள்ளது. இடைநின்ற மாணவர்கள் குறித்த உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு விசாரணையை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog