தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந.கஎண் : 34462 /பிடி1/ இ1/2020 நாள்.05.02.2021
பொருள்
பள்ளிக் கல்வி அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள்
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது - வழிகாட்டு
நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர்களின் இசைவு கடிதங்கள்
பெற்றிடவும் அறிவுரைகள் - சார்ந்து
அரசாணைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது . மேலும் பார்வை 2 ல் உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை மற்றும் பார்வை 3 -ல் உள்ள அரசாணையில் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11 வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது . 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் 8.02.2021 முதல் செயல்பட , பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட் -19 தொடர்பான உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் , இணைப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு மற்றும் பள்ளிகளின் இசைவு படிவத்தினை பெற்றிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Friday, February 05, 2021
பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்.05.02.2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.