பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்.05.02.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 05, 2021

Comments:0

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்.05.02.2021

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந.கஎண் : 34462 /பிடி1/ இ1/2020 நாள்.05.02.2021

பொருள்
பள்ளிக் கல்வி அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர்களின் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் - சார்ந்து அரசாணைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது . மேலும் பார்வை 2 ல் உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை மற்றும் பார்வை 3 -ல் உள்ள அரசாணையில் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11 வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது . 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் 8.02.2021 முதல் செயல்பட , பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட் -19 தொடர்பான உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் , இணைப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு மற்றும் பள்ளிகளின் இசைவு படிவத்தினை பெற்றிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews