2,400 பேருக்கு வேலை என்னாச்சு? ஓராண்டாக தேர்வு நடத்தாத மின் வாரியம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 07, 2021

Comments:0

2,400 பேருக்கு வேலை என்னாச்சு? ஓராண்டாக தேர்வு நடத்தாத மின் வாரியம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மின் வாரியத்தில், 2,400 பேரை நியமனம் செய்வதற்காக அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும், இதுவரை தேர்வு நடத்தப்படாதது, விண்ணப்பதாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மின் வாரியத்தில், 52 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதால், தற்போது பணியில் இருப்பவர்களுக்கு, அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு, 2020 ஜன., 8ல் வெளியானது. பட்டதாரிகளிடம் இருந்து, பிப்., - மார்ச் மாதங்களில், இணையத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதற்கு, 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். மே மாதம் எழுத்து தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவருக்கு, அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணி ஆணை வழங்க திட்டமிடப் பட்டது. மார்ச் இறுதியில் ஊரடங்கு அமலானதால், திட்டமிட்டபடி தேர்வு நடத்தவில்லை. ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வந்த நிலையிலும், இதுவரை, தேர்வு நடத்தப்படாத நிலையில், நாளையுடன், தேர்வு அறிவிப்பாணை வெளியாகி, ஓராண்டு முடிகிறது. இது குறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தல், ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நடத்தை விதி அமலுக்கு வரும். அதற்குள், மின் வாரியம் தேர்வு நடத்தி, முடிவை அறிவிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இம்மாதம் அல்லது பிப்., இறுதிக்குள், விரைவாக தேர்வு நடத்தி, வேலைக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews