தமிழரின் ஐந்திணை புகைப்படப் போட்டி - காயிதே மில்லத் ஊடக கல்வி நிறுவனம் அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 25, 2020

Comments:0

தமிழரின் ஐந்திணை புகைப்படப் போட்டி - காயிதே மில்லத் ஊடக கல்வி நிறுவனம் அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் (Linden Museum- Stuttgart) தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘அகம் புறம் - தமிழர் பண்பாட்டு வரலாறு’ என்றதலைப்பில், சர்வதேச சிறப்புக் கண்காட்சி அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் 2022-ம் ஆண்டு மே மாதம் வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் தமிழர்களின் தனித்த அடையாளமான திணைக் கோட்பாட்டை புகைப்படங்கள் மூலம் சித்தரிக்க, காயிதேமில்லத் பன்னாட்டு ஊடகக் கல்வி நிறுவனம் ‘தமிழரின் ஐந்திணை’ என்ற பொருளில் புகைப்பட போட்டியை அறிவித்துள்ளது. இதன்படி திணை மற்றும் திணை சார்ந்த தமிழரின் வாழ்வியலை, இன்றைய சூழலில் சித்தரிக்கக்கூடிய வகையில், போட்டியாளர்களிடமிருந்து பிப்ரவரி15-ம் தேதிக்குள் புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு திணை சார்பாக3 படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் 15 புகைப்படங்கள் லிண்டன் அருங்காட்சியகத்தின் சர்வதேச சிறப்புக் கண்காட்சியில் இடம் பெறும். அத்தோடு அவற்றுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். இந்த புகைப்படப் போட்டியின் ஆலோசகராக ‘போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ்’ உள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தையும், 73057 36163 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்
CLICK HERE FOR APPLY 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews