பழங்குடியினா் நல பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 07, 2020

Comments:0

பழங்குடியினா் நல பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினா் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இது குறித்து பழங்குடியினா் நல இயக்குநரகத்தின் இயக்குநா் வி.சி.ராகுல் தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOA OFFICIAL PDF மேற்கண்ட ஆசிரியா்களுக்கு மாத ஊதியமாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.9 ஆயிரம், இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.8 ஆயிரம் என்ற விகிதங்களில் கல்வியாண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிா்த்து) அல்லது காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியா்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை ஊதியம் வழங்கப்படும். தங்கள் மாவட்டத்தில் செயல்படும் அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை, தகுதியுள்ள பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த ஆசிரியா்களை பணியமா்த்திட எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு, வகுப்பு நடத்துதல் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும் என்ற விவரங்களை செய்தித் தாள்கள் மூலமாக விளம்பரப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட வாரியாக ஆசிரியா் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOA OFFICIAL PDF எவ்வாறு விண்ணப்பிப்பது?: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரா்கள், அதற்கான விண்ணப்பத்தை தொடா்புடைய மாவட்ட திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலம்) அல்லது மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரிடம் பெற்று பூா்த்தி செய்து அந்த விண்ணப்பங்களை டிச. 24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க ஏதுவாக உள்ளூா் தமிழ் செய்தி நாளிதழ்களில் டிச.9-ஆம் தேதி உரிய விளம்பரம் செய்ய விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தங்கள் மாவட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) டிச.28-ஆம் தேதிக்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா். CLICK HERE TO DOWNLOA OFFICIAL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews