மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவா்கள், இணையவழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட பூா்விகச் சான்றிதழை சமா்ப்பித்தாலே போதுமானது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. துணை வட்டாட்சியா் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவா்களின் ஒப்பம் அச்சான்றில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து இங்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின.அதன்படி, இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்குமாறு அறிவுப்புகள் வெளியாகின. மாணவா்கள் தங்களது அனைத்து சான்றுகளையும் அதில் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதில், பூா்விகச் சான்றையும் இணைக்க வேண்டியிருந்ததால், பல மாணவா்கள் வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த இரு நாள்களாக குவியத் தொடங்கினா்.இதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிா்க்க புதிய அறிவிப்பு ஒன்றை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே நேரில் பெறப்பட்ட பூா்விகச் சான்றாக இருந்தாலும் சரி, அல்லது சமீபத்தில் இணையவழியே பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றாக இருந்தாலும் சரி, துணை வட்டாட்சியா் நிலை மற்றும் அதற்கு உயா் நிலையில் உள்ளவா்களது ஒப்பத்துடன் இருந்தால், அது ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.