Breaking

Friday, November 27, 2020

விமான படை ஆள்சேர்ப்பு முன்பதிவுக்கு அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய விமான படை சார்பில் நடைபெற உள்ள, ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, முன்பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையில், 'குரூப் - எக்ஸ்' டிரேடுகள், 'குரூப் - ஒய்' பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள் மற்றும் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஆள்சேர்ப்பு முகாம், புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், டிசம்பர், 10 முதல், 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல், 28ம் தேதி, மாலை 5:00 மணிக்குள், www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது, முன்பதிவு செய்வதற்கான அவகாசம், நவம்பர், 30 மாலை, 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ஆள்சேர்ப்பு முகாமில், தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என, விமான படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog