அமைச்சர் அன்பழகனிடம் வேளாண்துறை ஒப்படைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 02, 2020

Comments:0

அமைச்சர் அன்பழகனிடம் வேளாண்துறை ஒப்படைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம், வேளாண் துறையை ஒப்படைத்து, கவர்னர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, அவர் வகித்து வந்த, வேளாண் துறையை பெற, அமைச்சர்கள் இடையே, போட்டி எழுந்தது. துரைக்கண்ணு, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அப்பகுதி அமைச்சர்கள், வேளாண் துறையை எதிர்பார்த்தனர். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட போது, அவர் வகித்து வந்த துறை, முக்குலத்தோர்சமூகத்தைச் சேர்ந்த, வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.அதே வழிமுறையை பின்பற்ற வேண்டும் என, வன்னியர் சமூகத்தினர் வலியுறுத்தினர். இந்நிலையில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம், வேளாண் துறை ஒப்படைக்கப்பட்டு உள்ளது.முதல்வர் பரிந்துரையை ஏற்று, இதற்கான உத்தரவை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து உள்ளார்.இனி, அன்பழகன் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் என, அழைக்கப்படுவார்.அவருக்கு, வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை துறை, கரும்பு வளர்ச்சி மற்றும் தரிசு நிலம் மேம்பாடு போன்றவை ஒதுக்கப்பட்டு உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews