பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு..உற்சாகத்தில் மாணவர்கள்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 12, 2020

Comments:0

பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு..உற்சாகத்தில் மாணவர்கள்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் இன்று முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த செப்டம்பரில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையாக 5 நாட்கள் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்தவொரு வகுப்பும் நடைபெறாது எனவும் பள்ளிக்கல்வித்துறையானது அறிவித்திருக்கிறது. மீண்டும் வருகின்ற திங்கட்கிழமை முதல் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவராத நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews