கடந்த செப்டம்பர் இறுதியில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு (Final Semester Exam) நடைபெற்றது. கொரோனா அச்சம் மற்றும் இணையக்கோளாறு காரணமாக பல மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. எனவே இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் எனவும், இந்த தேர்வுகள் ஆன்லைன் (Online Exam) மூலம் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இணையக்கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்கள் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது. இறுதி செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்துவோம் என தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.