ஆசிரியர் கலந்தாய்வு ரத்தால், புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

ஆசிரியர் கலந்தாய்வு ரத்தால், புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவால் கலந்தாய்வு ரத்து புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள் உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சி - பத்திரிகை செய்தி
கொரோனாவால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் , புரோக்கர்கள் உதவியுடன் வெளி மாவட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால் , உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவியதை தொடர்ந்து , கடந்த மார்ச் முதல் 9 மாதமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் , இந்தாண்டு பள்ளி கல்வித்துறையில் வழக்க மாக ஜூன் மாதம் நடை பெறும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வும் நடத்தப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது . இதை பயன்படுத்தி , விரும்பிய பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று கொடுக்க , நாமக்கல்லில் உள்ள கல்வித் துறை புரோக்கர்கள் வரிந்து கட்டிகொண்டு களம் இறங்கியுள்ளனர் . வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் , நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் கல்வித்துறை புரோக்கர்கள் மூலம் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுவருகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews