அரசாணை படி ஊதிய உயர்வு வழங்க முதல்வருக்கு கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

அரசாணை படி ஊதிய உயர்வு வழங்க முதல்வருக்கு கோரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு அறிவித்தபடி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்' என, அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி, பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். ரத்து சம்பள உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள்கூட்டமைப்பினர், 2019ல், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் வாக்குறுதியை ஏற்று, போராட்டத்தை கைவிட்ட நிலையில், 118 டாக்டர்கள், பல்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பணியிட மாற்றம் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, 100 டாக்டர்கள் பழைய இடங்களிலேயே பணி அமர்த்தப்பட்டனர்.மீதமுள்ள, 18 டாக்டர்கள், பழைய இடங்களுக்கு மாற்றப்படாமல், புதிய இடங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, பழைய இடங்களிலேயே பணி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்க மறுப்பு இதுகுறித்து, அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி, பெருமாள் பிள்ளை கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில், டாக்டர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுக்கு இணையான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு, டாக்டர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. கொரோனா காலத்தில், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் டாக்டர் களுக்கு ஊதிய உயர்வு அளித்தால், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் தான் கூடுதலாக செலவாகும்.சிக்கலான நேரத்திலும், தங்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு, ஊக்கம் அளிக்கும் வகையில், ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வரவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews