அரசு பள்ளி மாணவர்கள் 750 பேர் உட்பட1,623 மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 18, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்கள் 750 பேர் உட்பட1,623 மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளை சேர்ந்த, 750 பேர் உட்பட, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,623 மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், 90 மாணவர்கள், 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார், 664 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளி மாணவர்களில், அதிக மதிப்பெண் பெற்றவராக உள்ளார்.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மொத்தம், 1,623 பேர் நீட் தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், 90 மாணவர்கள், 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அதாவது, நான்கு மாணவர்கள், 500க்கு மேல் பெற்றுள்ளனர். 71 பேர், 300 முதல், 400 வரை பெற்றுள்ளனர். 15 பேர், 400 முதல், 500க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இவர்களில், 750 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மற்றவர்கள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள். கோவை கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி வாசுகி, 580; காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் மாணவர் சக்திவேல், 552; நவீன்குமார், 527 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, அரசு பள்ளிகளில் படித்த, மாற்று திறனாளி மாணவர்கள், 35 பேருக்கு, பள்ளி கல்வி இயக்குனரகமும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து பயிற்சி அளித்தன.அதில், மூன்று பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், திருவள்ளூர் கண்டிகை அரசு பள்ளி மாணவர், கிஷோர்குமார், 201 மதிப்பெண் பெற்று, மாற்று திறனாளி பிரிவில், அகில இந்திய அளவில், 1,113ம் இடம் பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலானால், இவர்களில் பலருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பயிற்சி மையமின்றிஅசத்திய மாணவர் அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள், அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, தனியார் பயிற்சி வழியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அளித்த பயிற்சி வழியாகவும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரக்கோணத்தை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர், எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், 674 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவர், 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து விட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 மட்டும் தனியார் பள்ளியில் முடித்துள்ளார். பின், ஓராண்டு வீட்டிலேயே தினமும், 10 மணி நேரம் வரை படித்து, நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews