கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் தேர்வு நடத்த அரசின் முன்அனுமதி அவசியம் உயர் கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் தேர்வு நடத்த அரசின் முன்அனுமதி அவசியம் உயர் கல்வித்துறை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் முயற்சித்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்வு நடத்துவதற்கு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அரசின் முன்ஒப்புதல் பெற வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மூடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
எனவே அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் மாணவர்கள், பேராசிரியர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் ஆன்லைன், ஆப்லைன் தேர்வுகளை நடத்துவது உள்பட உயர் கல்வித்துறையின் எந்தவொரு செயல்பாட்டுக்கும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் அரசாங்கத்தின் முன்ஒப்புதலை பெறவேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் உறுதியாக பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் முன்ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாகவும், தொழில்நுட்ப கல்வி, கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் கீழ்வரும் கல்லூரிகள் அனுமதி கேட்டு கடிதத்தை அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews