'ஆல் பாஸ்' முடிவு தவறானது: சகஸ்ரபுதேவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

'ஆல் பாஸ்' முடிவு தவறானது: சகஸ்ரபுதேவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தமிழக அரசின் இந்த முடிவு ஏற்புடையதல்ல என்று ஏஐசிடிஐ தரப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இமெயில் வந்ததாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். 'அரியர் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கியது குறித்து, மத்திய அரசிடம், தமிழக அரசு ஆலோசிக்கவில்லை' என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தெரிவித்துள்ளார். ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர் அனில் சகஸ்ரபுதேவி அளித்த பேட்டி: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவது குறித்து, மத்திய அரசிடம், தமிழக அரசு ஆலோசிக்கவில்லை. இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, தமிழக அரசு எந்த கடிதமும் அனுப்பவில்லை.தேர்வே நடத்தாமல், மாணவர்களுக்கு எப்படி தேர்ச்சி வழங்க முடியும். இது தவறான முடிவு. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், ஏ.ஐ.சி.டி.இ., உரிய பதில் அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், 'அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் நடைமுறை குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் இருந்து, தங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. ஏ.ஐ.சி.டி.இ.,க்கு தமிழக அரசும் கடிதம் எழுதவில்லை' என்று, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், ஏஐசிடிஐ தரப்பில் இருந்து தமிழக அரசுக்கோ உயர்கல்வித்துறைக்கோ மின்னஞ்சல் வரவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ள மின்னஞ்சலைக் காட்டும்படியும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியிருந்தார். மேலும், அரியர் தேர்வு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஏஐசிடிஐ தலைவர் அணில் சக்ஸரபுதே தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், தமிழகத்தில் பிஇ அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது என்றும், இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பட்டது, ஆனால் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews