10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 விழுக்காடு மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 1.10.2020 முதல் பள்ளிக்கு வரவழைத்தல் தொடர்பாக DEO செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 24, 2020

Comments:0

10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 விழுக்காடு மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 1.10.2020 முதல் பள்ளிக்கு வரவழைத்தல் தொடர்பாக DEO செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவனின் செயல்முறைகள்
நக.எண்.2009/41/2020, நாள். 24.09.2020.
பொருள் -
பள்ளிக் கல்வி - கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம்- 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 01-12-20020 முதல் 50 விழுக்காடு மாணவ / மாணவிகளை மற்றும் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்தல் தொடர்பாக மற்றும் மாணவர்களின் அட்டவணை கோருதல் சார்பாக

பார்வை -
அரசாணை எண்.523) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள் 24.09.2020
2.கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரை நாள் 24.09.2020.
பார்வை 1 மற்றும் 2ல் காண் அரசாணை மற்றும் அறிவுரைகிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகராட்சி உதவிபெறும் பள்ளிகள் தலைமையாசிரியர்கள் தனி கவனம் ஈர்க்கப்படுகிறது.
கொரணா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் பார்வை 1ல் காண் அரசாணையின்படி வருகின்ற 01-10-2020 முதல் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழ் கண்டவாறு மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள தலைமையாசிரியர்கள் பள்ளி பாடவேளைகளை (Time Table) தயாரித்து மூன்று நகல்களில் இவ்வலுவகத்திற்கு 25-09-2020 மாலைக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1. 10ம் வகுப்பிற்கு 100 மாணவர்கள் மேல் உள்ள பள்ளிகள் மட்டும்
2. 1ம் வகுப்பிற்கு 150 மாணவர்கள் மேல் உள்ள பள்ளிகள் மட்டும்
3. 12ம் வகுப்பிற்கு 150 மாணவர்கள் மேல் உள்ள பள்ளிகள் மட்டும்
ஒரு வகுப்பறையில் 15 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் கால அட்டவணை தயார் செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மேற்கண்ட மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தலைமையாசிரியர்கள் இவ்வலுவலகத்திற்கு அட்டவனையுடன் நாளை 25-09-2020 பிற்பகல் 3.00 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்
கிருஷ்ணகிரி
பெறுதல்,
அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம்,
நகல்-
முதன்மைக் கல்வி அலுவலர் , கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பிவைக்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews