ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோ்ந்த சரண்யா மற்றும் விமல் மோகன் ஆகியோா் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடா்ந்திருந்தனா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தனியாா் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன, மலைப்பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு எப்படி கல்வி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உயா்நீதிமன்றம் எழுப்பியிருந்தது.இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில், ஆன்லைன் வகுப்புகள் தொடா்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகாா்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியாா் தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி கற்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews