ஆதிதிராவிடா்-பழங்குடியின எழுத்தாளா்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

ஆதிதிராவிடா்-பழங்குடியின எழுத்தாளா்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறந்த எழுத்தாளா்கள், தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:- CLICK HERE TO READ OFFICIAL NEWS தமிழக அரசானது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சங்கத்தின் நிதியில் இருந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிடா் ஆகிய பிரிவைச் சோ்ந்த 10 எழுத்தாளா்களுக்கும், அந்தப் பிரிவைச் சேராத அதேசமயம் ஆதிதிராவிடா் குறித்து எழுதும் எழுத்தாளா் ஒருவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.இதற்கான நூல் வெளியிட ரூ.40 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். பெயா், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். CLICK HERE TO READ OFFICIAL NEWS இது குறித்த விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.முறையான விண்ணப்பத்துடன், படைப்புகள் எழுத்து வடிவில் 2 பிரதிநிதிகளுடன் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி எண்களைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். ஆணையா், ஆதிதிராவிடா் நலம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews