பல்கலை, கல்லூரிகள் திறப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 26, 2020

Comments:0

பல்கலை, கல்லூரிகள் திறப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும், இந்த கல்வி ஆண்டில் முதலாண்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையையும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நவம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2021 மார்ச் 8ம் தேதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அந்த வல்லுநர் குழு கடந்த 29.4.20அன்று தனது பரிந்துரைகளை அளித்தது. இந்நிலையில், கொரோனா தொற்று குறையாமல் அதிகரித்து வந்ததை அடுத்து, அந்த வல்லுநர் குழு மீண்டும் கூடி ஆய்வு செய்து ஜூலை மாதம் ஒரு அறிக்கையை வழங்கியது. இதையடுத்து, அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை 6ம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இருப்பினும், மேற்கண்ட இரண்டு அறிக்கைகளையும் வல்லுநர் குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடங்க வேண்டிய நாள், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து புதிதாக திருத்திய அறிக்கை வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி வல்லுநர் குழு மீண்டும் கூடியது. அதற்கு பிறகு புதிய காலண்டர் வெளியிட ஒப்புதல் அளித்தது. அதன்படி பல்கலைக்கழக மானியக் குழு, முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்கள் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உரிய வழிகளில் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தேவையான தகுதியுள்ள சான்றுகள் டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்கப்பட வேண்டும். மெரிட் மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நவம்பர் 31ம் தேதி வரை நிரப்பலாம். இந்த கல்வி ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்காட்டி கீழ்கண்டபடி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். * முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். * முதலாம் ஆண்டு அல்லது முதல் பருவத்துக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் ெதாடங்க வேண்டும். * முதல் பருவத் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை 2021 மார்ச் 1ம் தேதி முதல் 2021 மார்ச் 7ம் தேதி வரை செய்ய வேண்டும். * தேர்வுகளை 2021 மார்ச் 8ம் தேதி முதல் 26ம் தேதிவரை நடத்த வேண்டும். * பருவத் தேர்வுக்கு பிறகான இடைவேளை மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை எடுத்துக் கொள்ள வேண்டும். * அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் 2021 ஏப்ரல் 5ம் தேதி தொடங்க வேண்டும். * அடுத்த தேர்வுக்கான முன்னேற்பாடுகளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை செய்யலாம். * அடுத்த தேர்வுகள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்த வேண்டும். * பருவத் தேர்வுக்கான இடைவேளை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை எடுத்துக் கொள்ளலாம். * இந்த முதலாண்டு மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு என்பது ஆகஸ்ட் 30ம் தேதியில் தொடங்கும். (மேற்கண்ட மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால், பல்கலைக்கழகங்கள் இந்த கல்வி ஆண்டை 2020 நவம்பர் 18ம் தேதியில் தொடங்கும் வகையில் திட்டமிடலாம். அதேபோல கற்பித்தல் தொடர்பான பணிகளை ஆன்லைன் முறையிலேயே தொடரலாம்) * அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்த கல்வி ஆண்டில் வாரம் 6 நாட்கள் பணிநாட்கள் என்பதை பின்பற்ற வேண்டும். இது 2020-21 மற்றும் 2021-22 வரை பின்பற்றப்பட வேண்டும். * கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு பணப் பிரச்னையில் சிக்கியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சான்றுகளை திரும்பப் பெறும் போது அனைத்து கட்டணங்களையும் பிடித்தம் ஏதும் இல்லாமல் நவம்பர் 31ம் தேதி வரை திரும்ப வழங்க வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்குள் சான்றுகள் திரும்ப கேட்கும் பெற்றோரிடம் அனைத்து கட்டணத்தையும் பிடித்தம் இல்லாமல் வழங்க வேண்டும், அப்படி ஏதாவது பிடித்தம் செய்ய வேண்டியிருந்தால் அதிகபட்சமாக 1000 புராசசிங் கட்டணமாக பிடித்தம் செய்யலாம். * இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் தாமதம் இல்லாமல் உரிய நேரத்தில் பட்டங்களை பெறும் வகையில், தாமதத்தை சரிகட்டும் வகையில் பணி நாட்களை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்தும் வகையில் இடைவேளை மற்றும் விடுமுறைகளை சரிகட்ட வேண்டும். * கடந்த 29.4.20 மற்றும் 6.7.20 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ள கற்பித்தல் வழிமுறைகளையும், தேர்வு நடத்தும் முறைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews