ஆன்லைன் வகுப்புகள் திடீர் நிறுத்தம்..! அமைச்சரின் அறிவிப்புக்கு இதுதான் காரணமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 09, 2020

ஆன்லைன் வகுப்புகள் திடீர் நிறுத்தம்..! அமைச்சரின் அறிவிப்புக்கு இதுதான் காரணமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews