பல்கலை., கல்லூரிகளில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க செப்.30 வரை அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 14, 2020

பல்கலை., கல்லூரிகளில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க செப்.30 வரை அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிகளில் திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்குவதற்கான காலஅவகாசம் செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (என்எஸ்க்யூஎஃப்) திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு சார்ந்த இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்தது. இதுதவிர, நடப்பு கல்வி ஆண்டில் திறன் வளர்ப்பு சார்ந்த புதிய படிப்புகளை தொடங் கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் எனவும் யுஜிசி தெரிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆர்வத்துடன் திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்கி வருகின்றன. கரோனா தொற்றை கருத்தில்கொண்டு திறன்வளர் படிப்புகளை தொடங்குவதற்கான காலஅவகாசத்தை செப்.30-ம் தேதி வரை யுஜிசி நீட்டித்துள்ளது. விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய திறன்வளர் படிப்புகளை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews