தமிழகத்தில் இரு மொழி கொள்கை :மத்திய அரசுக்கு உயர்கல்வி அமைச்சர் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

தமிழகத்தில் இரு மொழி கொள்கை :மத்திய அரசுக்கு உயர்கல்வி அமைச்சர் கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தமிழகத்தில், இரு மொழி கொள்கையே மீண்டும் தொடரும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது,மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்' என, மத்திய அரசுக்கு, தமிழக உயர் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தமிழக உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அனுப்பியுள்ள கடிதம்:மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆராய, முதல்வர் ஆலோசனைப்படி, உயர் கல்வி முதன்மை செயலர் தலைமையில், ஏழு பேர் இடம் பெற்ற நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதி இந்த குழு ஆய்வு செய்து, பரிந்துரைகள் அளித்த பிறகே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும். அதற்கு முன், புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆரம்ப கட்ட கருத்துக்களை, இந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். புதிய கல்விக் கொள்கையில், மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.அகில இந்திய உயர் கல்வி ஆய்வுப்படி, தேசிய அளவில், 49 சதவீதமாக மாணவர் சேர்க்கை உள்ளது. ஆனால், தமிழகத்தில்புதிய கல்லுாரிகளை திறப்பது, புதிய பாடப் பிரிவுகளை உருவாக்குதல், போதிய அளவு பேராசிரியர்களை நியமித்தல், ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றால், மாணவர் சேர்க்கை விகிதத்தில், 65 சதவீதத்தை எட்டியுள்ளோம் என, பெருமையுடன் கூறுகிறோம். அகில இந்திய அளவில், 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில், 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை எட்டியுள்ளோம். ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பை, நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக மாற்ற, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கூடுதல் சுமை பட்டப் படிப்பை விரைந்து முடித்து, ஆசிரியர் பணிக்கு விரைவில் திரும்ப, இந்த திட்டம் உதவும். தேசிய அளவில், நுழைவுத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.கல்வி நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யவும், பட்டங்களை நேரடியாக வழங்கும் வகையில், கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.கல்லுாரிகளை தன்னாட்சி மற்றும் உறுப்பு கல்லுாரிகள் என, வகைப்படுத்தலாம். ஆனால், பட்டங்களை நேரடியாக வழங்கும் தன்னாட்சி கல்லுாரிகளாக மாற்றினால், பல்கலைகளில் இருந்து, அந்த கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.தமிழகத்தில், 587 கல்லுாரிகளும், 53 தன்னாட்சி கல்லுாரிகளும் செயல்படுகின்றன. தன்னாட்சி அல்லாத கல்லுாரிகள், சம்பந்தப்பட்ட இணைப்பு பல்கலைகளுடன் சேர்ந்து உயர வேண்டியுள்ளது. மீண்டும் தொடரும் எனவே, கல்லுாரிகளை பொறுத்தவரை, தற்போது தமிழகம் பின்பற்றும் நிலையே மீண்டும் தொடரும்.மாநில மொழி அளவிலான பட்டப் படிப்புகளை நடத்த வேண்டும் என, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் இந்த திட்டம் அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, இரு மொழி கொள்கை ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. இந்த கொள்கை வெற்றிகரமானதாக உள்ளது. எனவே, எதிர்காலத்திலும் தமிழகத்தில், அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும், இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews