ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 06, 2020

ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப் மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமையால் (என்.டி.ஏ.) செப்டம்பர் 11ந்தேதி தேர்வு முடிவுகளுடன் வெளியிடப்படும். இதில் இரண்டுவகை ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப்கள் இருக்கும். அவை தகுதிபெறும் கட்ஆஃப் மற்றும் சேர்க்கைக்கான கட்ஆஃப்.
பரிந்துரைக்கப்படுகிறது : [என்.ஐ.டி. ஐ.ஐ.டி. அரசுக் கல்லூரிகளில் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் தரநிலையின் அடிப்படையில் உங்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னறிய இந்த சுட்டியை பயன்படுத்துவீர்
(ஜே.இ.இ மெயின் கல்லூரி முன்னறிவிப்பான்)
ஜே.இ.இ. மெயின் தகுதிபெறும் கட்ஆஃப் மதிப்பெண் என்பது ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு எழுத ஒரு தேர்வு நாடுநர் தகுதி பெற தேவையான குறைந்தபட்ச விழுக்காடு ஆகும். இதனை தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளுடன் அறிவிக்கும். என்.டி.ஏ. ஜே.இ.இ. மெயின் கட் ஆஃப் மதிப்பெண்களை பிரிவு வாரியாக வகைப்படுத்தி அறிவிக்கும். அதாவது பொதுப்பிரிவு, ஓ.பி.சி, பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், எஸ்.சி, எஸ்.டி, மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவுகள். ஜே.இ.இ. மெயின் சேர்க்கை கட்ஆஃப் என்பது பொது கலந்தாய்வுகளில் பங்கேற்கும் 31 என்.ஐ.டி.க்கள் 25 ஐ.ஐ.டிக்கள் மன்றும் 28 ஜி.எப்.டி.ஐ.கள் வழங்கும் பி.டெக் படிப்புகளுக்கான சேர்க்கைகளை முடிவு செய்வது. இந்த ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப் தரவரிசைகள் இந்த கலந்தாய்வுகளை நடத்தும் கூட்டு இட ஒதுக்கீட்டு ஆணையத்தால் (JoSAA) வெளியிடப்படுகிறது.
ஜே.இ.இ பிரதான கட்ஆஃப்களை முடிவு செய்யும் காரணிகள்
சில காரணிகள் ஜே.இ.இ. பிரதான கட்ஆஃப்களை தகுதி பெறச்செய்யும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை
மொத்த இடங்கள்
ஜே.இ.இ. பிரதான தேர்வின் கடின நிலை
முந்தைய ஆண்டின் கட்ஆஃப் போக்கு
தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை
ஜே.இ.இ. மெயின் 2020 கட்ஆஃப் தேர்வு முடிவுகளுடன் வெளியிடப்படும். அதுவரை தேர்வர்கள் முந்தைய ஆண்டுகளின் கட்ஆஃப்களை சரிபார்க்கலாம்.
ஜே.இ.இ. பிரதான தகுதி பெறும் கட்ஆஃப் 2019
2019 ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ பிரதான தேர்பு முடிவுகளை கணக்கிட நேராக்கல் முறையை என்.டி.ஏ. கடைபிடிப்பதால், தகுதிபெறும் கட்ஆஃப்கள் சதவீத அடிப்படையிலேயே அமையும். ஜே.இ.இ. 2020 செப்டம்பர் 1-6 வரை ஆன்லைன் முறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மதிப்பெண்களைக் கொண்டு, 31 என்.ஐ.டி.க்கள் 25 ஐ.ஐ.டிக்கள் மற்றும் 28 சி.எஃப்.டிஐ.களில் சேர்க்கை நடைபெறும். பீகார், மத்திய பிரதேசம், அரியானா, உத்தராகண்ட், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் நாகாலாந்து மற்றும் ஏராளமான தனியார் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகள் ஜே.இ.இ. பிரதான தரவரிசைப்பட்டியல்களை மாணவர் சேர்க்கைக்கு ஏற்கின்றன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews