SI ஏழுத்துத் தேர்வில் முறைகேடு; மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 27, 2020

SI ஏழுத்துத் தேர்வில் முறைகேடு; மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மனு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணிக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற எழுத்து தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆதலால் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமெனகோரி தொடரப்பட்ட மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில், ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில் 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக மார்ச் மாதம் வெளியான முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவில், பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் காப்பியடித்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுகுறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம், மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews