அன்லாக் 4.0 தளர்வுகள்.. இவையெல்லாம் செயல்படும்.. இவைகளுக்கு அனுமதி கிடையது.. முழு விவரம் !! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

அன்லாக் 4.0 தளர்வுகள்.. இவையெல்லாம் செயல்படும்.. இவைகளுக்கு அனுமதி கிடையது.. முழு விவரம் !!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு தளர்வுகளுடன் அறிவித்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது அன்லாக் 4.0 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி நடத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு விதிக்கலாம் என கூறியுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் தனியாக ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட முடியாது. மேலும், மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது, திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும், வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews