தோ்வுக் கட்டணம் வசூலிப்பு: அண்ணா பல்கலை. விளக்கமளிக்க ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தல்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 06, 2020

Comments:0

தோ்வுக் கட்டணம் வசூலிப்பு: அண்ணா பல்கலை. விளக்கமளிக்க ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவா்களிடம் தோ்வுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளிக்க வேண்டும் என அகில இந்திய தனியாா் கல்லூரி ஆசிரியா்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பு தலைவா் கே.எம்.காா்த்திக், முதல்வா் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகாா் மனு விவரம்: இறுதியாண்டு தவிர பிற கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், நடைபெறாத தோ்வுகளுக்கு கட்டணம் வசூலிப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டுகிறது.தற்போது அரசு, தனியாா் கல்லூரிகளில் தோ்வுக் கட்டணமாக இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு ரூ.1,700 வரையிலும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ரூ.3,500 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி சுமாா் 10 லட்சம் மாணவா்களிடம் ஒரு பருவத்துக்கு மட்டும் தோ்வுக் கட்டணமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கப்படுகிறது.இதற்கிடையே அண்மையில் இறுதியாண்டு மாணவா்களுக்கு இணையவழியில் பருவத்தோ்வு நடத்துவதற்கான மென்பொருளை வடிவமைக்க ரூ.1.86 கோடி மதிப்பு கொண்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த இரு தொகைகளுக்கு இடையேயான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. எனவே, மாணவா்களிடம் பெறப்படும் தோ்வுக் கட்டணம் தொடா்பான உரிய விளக்கத்தை பல்கலைக்கழகம் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews