வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் (HM's) தினந்தோறும் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 27.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 28, 2020

வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் (HM's) தினந்தோறும் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 27.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் (HM's) தினந்தோறும் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். உதவி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வருகைதர வேண்டும். தவறினால் BEO, H.M, உதவி ஆசிரியர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விழுப்புரம் மாவட்ட CEO அவர்கள் உத்திரவு. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நகஎண் 16990 12 2020 நாள் 27.08.2020
பொருள் : தொடக்கக் கல்வி - ஊரட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி முதன்மைக் கல்வி அலுவரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக
பார்வை : விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் 25.08.2020 அன்று பள்ளிகளை திடீர் பார்வையிட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் 25.08.2020 அன்று, விழுப்புரம் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட, ஒன்றியங்களில் உள்ள அனைத்து உயர்நிலை/மேல்நிலை/ ஊராட்சி நகராட்சி/ தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சென்ற போது, பல பள்ளிகளில், பள்ளித் தலைமை ஆசிரியரோ, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களோ, பள்ளிக்கு வருகை தரவில்லை, எனவும், பள்ளியில் சேர்க்கை பணியும் நடைபெறவில்லை. எனவே, அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும், தினசரி தங்கள் ஒன்றியங்களிலுள்ள, அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, பள்ளியில், தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருகிறார்களா எனவும், சுழற்சி முறையில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணிக்கு வருகை புரிகிறார்களா என்பதையும், மாணவர்கள் சேர்க்கை முறையாக நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டுமெனவும், அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , அடுத்து வரும் நாட்களில், இதுபோன்ற செயல்கள், மீண்டும் தொடர்ந்திட நேர்ந்தால், சம்மந்தப்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள், மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, கண்காணிக்க தவறிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்மூலம் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தொடக்க / நடுநிலை/ உயர் / மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருகிறார்களா என்பதையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முறையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும், பள்ளிகளை பார்வையிட்டு வாராந்திர அறிக்கையினை ஒவ்வொரு வாரமும், முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓம்/க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவன்
விழுப்புரம்.
பெறுநர்- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(விழுப்புரம் | திண்டிவனம்/ செஞ்சி) (தொடர் நடவடிக்ைைகக்காக)
நகல் : அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் - விழுப்புரம் மாவட்டம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews