ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் மாணவி தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 16, 2020

Comments:0

ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் மாணவி தற்கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவையில் ஆன்லைனில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். கோவை உடையாம்பாளையம் அருகேயுள்ள திருமலை நகரை சேர்ந்தவர் முருகானந்தம். கூலி தொழிலாளி. இவர் மகள் ஸ்நேகா (15). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த தகவலை ஸ்நேகா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் போதுமான வருமானம் இல்லாத நிலையில் சில நாட்கள் கடந்து பள்ளி கட்டணம் செலுத்தலாம் என அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதில் மனம் உடைந்த ஸ்நேகா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு இறந்தார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews