அப்துல் கலாம் நினைவாக போட்டி - ரூ.10 லட்சம் பரிசு - மத்திய அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 29, 2020

Comments:0

அப்துல் கலாம் நினைவாக போட்டி - ரூ.10 லட்சம் பரிசு - மத்திய அரசு அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் போட்டி ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் மரணமடைந்தார். ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் இவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் கலாமின் நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கனவு காணும் துணிச்சல் என்ற தலைப்பிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், புதுடெல்லியில் இதனை அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனி நபர்கள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில், இந்த போட்டி அமைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் தனி நபருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews