'வரும், 31ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டாம்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்படும் ஊரடங்கால், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும், ஆசிரியர்களும், பணியாளர்களும், குறைந்த அளவில் வரவழைக்கப் படுகின்றனர்.இந்நிலையில், வரும், 31ம் தேதி வரை கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர், அனிதா கர்வால், மாநில கல்வி துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை, 31ம் தேதி வரை திறக்க வேண்டாம். மாணவர்களுக்கு நேரடியாக அல்லாமல், தொலைநிலை வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம்.மேலும், உரிய விதிகளை பின்பற்றி, 'ஆன்லைன்' வகுப்புகளையும் நடத்தலாம். ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டும், நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு பணிக்கு வரலாம். முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை கல்லுாரிகளுக்கு அழைக்க வேண்டாம். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது - மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் அறிவுறுத்தல்.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்களது வீடுகளில் இருந்து தான் பணிபுரிய வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.