கரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி அன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா நெருக்கடி நிலை காரணமாக, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., அகாடமிக் இயக்குனர், ஜோசப் இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், சுகாதார ரீதியான அவசர நிலை உள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை.எனவே, நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாட திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுகுறித்து, ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கமிட்டியும், நிர்வாக கமிட்டி மற்றும் பாட திட்ட கமிட்டியும் இணைந்து, இந்த முடிவை எடுத்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு, பாட திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இணையதளம் : மாணவர்களுக்கு தேவையான முக்கிய பாடங்கள், முதன்மையான அம்சங்கள் பாதிக்காத வகையில், இந்த மாற்றங்கள் இருக்கும்.பள்ளி தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பாட திட்ட குறைப்பு தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறைக்கப்படும் பாடத் திட்டம், பள்ளிகளின் அக மதிப்பீடு, ஆண்டின் இறுதி பொது தேர்வு ஆகியவற்றில் இடம் பெறாது. அதேபோல, வகுப்புகள் நடத்தப்படும் நாட்களுக்கான, அகாடமிக் காலண்டர், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், புதிதாக தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, புதிய அகாடமிக் காலண்டரை பின்பற்ற வேண்டும். குறைக்கப்பட்ட பாட திட்ட விபரங்கள், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பாட திட்ட குறைப்பு குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:நடப்பு கல்வி ஆண்டில், பாட திட்ட குறைப்பு தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன; 1,500க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். கருத்துகல்வியாளர்கள் பலரும் கருத்துகளை பதிவு செய்தனர்.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் சூழலை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், மாணவர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள், அடிப்படை பாடங்கள் குறைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோவிட் பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பொக்ரியால், ''நாடு மற்றும் உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழலில் சிபிஎஸ்இ, தன்னுடைய பாடத்திட்டத்தை மீளாய்வு செய்து, பாடத்தின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை பாடத்திட்டத்தைக் குறைத்து அமல்படுத்த வேண்டும். எனினும் முக்கியப் பாடங்களின் கருத்துருக்கள் இருத்தல் அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார்.
9 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் இரு பகுதியாக நாடு முழுவதும் 6வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.
இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே புதிய கல்வியாண்டான ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் அவை முழுமையான அளவில் பயனளிக்கவில்லை என்பதாலும். கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பாலும், பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கை எழுந்து வந்தது.
இதனிடையே நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடவேளைகள் குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30% சிபிஎஸ்இ பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பாடச் சுமையை குறைக்க தாம் அறிவுறுத்தி உள்ளேன். 1,500 கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துக்களை பரிசீலித்து பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups



No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.