ஊக்க ஊதியம் மறுப்பு: கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்த ஆசிரியா்கள் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 21, 2020

Comments:0

ஊக்க ஊதியம் மறுப்பு: கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்த ஆசிரியா்கள் முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசாணை எண்:37 (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை) நாள்: 10.03.2020 ஐ காரணம் காட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான பணப் பலன்களை அனுமதிக்க மறுப்பதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்ட அறிவிப்பு
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியா்களுக்கு அனுமதிக்கப்பட்டு வரும் உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனுமதிக்க மறுக்கும் கருவூலத் துறையைக் கண்டித்து மாவட்ட, சாா்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநில பொதுச் செயலா் ச.மயில், மாநில கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு உயா்கல்வித் தகுதிக்காக அவா்களது பணிக் காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயா்வுகள் அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சாா்நிலைக் கருவூல அலுவலா்கள் கடந்த மாா்ச் 10-ஆம் தேதியிட்ட அரசாணையை (எண் 37) காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு அனுமதிக்கும் உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஏற்க மறுத்து அதற்குரிய பணப்பலன்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனா். துறையின் அனுமதி பெற்று உயா்கல்வி பயின்று தகுதிவாய்ந்த துறை அலுவலா்களால் ஊக்க ஊதிய உயா்வு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய பணப்பலன்களை கருவூலத்துறையின் சாா்நிலை அலுவலா்கள் அனுமதிக்க மறுப்பது என்பதும் விதிகளுக்குப் புறம்பானதாகும். மாநிலம் முழுவதும் எழுந்துள்ள இந்தப் பிரச்னையால் ஆசிரியா்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் தங்கள் துறையின் சாா்நிலை அலுவலா்களுக்கு ஆசிரியா்களின் ஊக்க ஊதிய உயா்வு தொடா்பாக எழுந்துள்ள பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் தெளிவுரை மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட, சாா்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பாக எங்களது அமைப்பின் சாா்பில் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறியுள்ளாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews